×

கரூர் ராயனூர் தாந்தோணி சாலையில் புதிதாக கட்டப்பட்ட வடிகாலில் உடைப்பு: வெளியேறும் கழிவுநீர்

கரூர், பிப். 10: கரூர் ராயனூர் தாந்தோணிமலை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வடிகாலில் உடைப்பு ஏற்பட்டு திரும்பவும் கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது. கரூர் ராயனூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து தாந்தோணிமலை குறிஞ்சி நகர் வரை இலங்கை தமிழர்கள் முகாம் பகுதியை ஒட்டி சாக்கடை வடிகால் அமைக்கும் பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இலங்கை தமிழர்கள் முகாம் சுற்றுச்சுவரை ஒட்டி வடிகால் அமைக்கும் பணி முடிவுற்று வெங்கடேஷ்வரா பகுதியில் தற்போது வாய்க்கால் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், வாய்க்கால் அமைக்கப்பட்டு, மண் பரப்பிய நிலையில், திரும்பவும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறிய நிலையில் உள்ளது.

கழிவுநீர் வெளியேற்றம் காரணமாக இந்த பகுதி முழுவதும் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், இதன் அருகிலேயே மின்கம்பமும் உள்ளதால், அதுவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே, இந்த பகுதியை விரைந்து பார்வையிட்டு சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்டுள்ள வடிகால் ஓரம் கழிவுநீர் கசிவை உடனடியாக தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karur Rayanoor Dhantoni Road ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு