×

அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், பிப். 10: கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக கரூரில் நேற்று பிஎஸ்என்எல் டிஓடி ஒய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைச் செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜான்பாட்ஷா, துணைத்தலைவர் மனோகரன், கிளை நிர்வாகிகள் ராமச்சந்திரன், சேட்டு, முருகேசன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். கரூரில் கடந்த 8 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டத்தை நடத்தி வரும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags : pensioners ,BSNL ,strike ,servants ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்