×

இடைப்பாடி அருகே வைக்கோல் லாரியில் மின்கம்பி உரசி தீ

இடைப்பாடி, பிப்.9: ஓமலூர் மல்லிகுட்டையை சேர்ந்தவர் பழனிச்சாமி(45). லாரி உரிமையாளரான இவர் வட்ராம்பாளையம் பகுதியில், வைக்கோலை ஏற்றிக் கொண்டு நேற்று மதியம் தேவூர் பனங்காடு வழியாக ஓமலூர் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே தாழ்வாகக் தொங்கிய மின்கம்பியில், லாரியில் இருந்த வைக்கோல் உரசியதில் திடீரென லாரியில் தீ பிடித்தது. இதையடுத்து, லாரியை நிறுத்தி பழனிசாமி மற்றும் அருகிலிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால், இடைப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராமன் தலைமையிலான வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தேவூர் எஸ்ஐ அந்தோணி மைக்கேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : straw truck ,
× RELATED மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு