×

தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு நிதிஉதவி

நாமக்கல், பிப்.9: கோவாவில் நடந்த தேசிய அளவிலான ஜூடோ போட்டியில், தமிழகத்தில் இருந்து 427 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில், நாமக்கல்லை சேர்ந்த சந்தோஷ், சேந்தமங்கலத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். இருவரும் நேபாளத்தில் இம்மாத இறுதியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஜூடோ போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். இருவரையும் நேரில் அழைத்து, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் பாராட்டி, தலா ₹15 ஆயிரம் நிதிஉதவி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், நகர பொறுப்பாளர் பூபதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கதிர்வேல், அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : judo competitions ,
× RELATED கோடை மழைக்கு வாய்ப்பு