×

வைக்கோல் போர் தீயில் எரிந்து சாம்பல்

சேந்தமங்கலம், பிப்.9:சேந்தமங்கலம் அடுத்த சின்னபள்ளம் பாறை செங்கமேடு பகுதியை சேர்ந்த விவசாயி மோகன் (56). இவர் தனது தோட்டத்தில் வைக்கோல் போர் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென வைக்கோல் போரில் தீப்பிடித்துக்கொண்டது. இதுகுறித்து மோகன் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் வைக்கோல் போர் முழுவதும் எரிந்து சாம்பலானது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : war ,Straw ,
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...