×

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி முன்னாள் ராணுவ வீரர் கைது

திருச்சி, பிப். 9: திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதியில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியின் அருகில் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் கடந்த 6ம் தேதி இரவு 7 மணியளவில் பல லட்ச ரூபாயை வைத்து சென்றனர். இந்த ஏடிஎம்மிற்கு காவலாளி இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் முகமுடி அணிந்தவர்கள் அபாய மணியின் மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து ஏடிஎம் மையத்தின் மெஷினை கடப்பாரையால் உடைத்தனர். ஆனாலும் உடைக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் ஏடிஎம்மின் ஸ்கிரீனை அடித்து உடைத்து சென்றனர். இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள் இதுகுறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வழக்குபதிந்து விசாரித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Ex-serviceman ,robbery ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...