×

அரசு ஊழியர்கள் 60 பேர் கைது மீண்டும் மறியல்

சாலை மறியலில் ஈடுபட்டு கைதான அரசு ஊழியர்களை கருமண்டபத்தில் ஒரு மஹாலில் தங்க வைத்திருந்தனர். அவர்களை மாலையில் விடுவித்தபோது மீண்டும் திருச்சி-திண்டுக்கல் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கண்டோன்மென்ட் போலீசார் அவர்களை மீண்டும் கைது செய்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மாற்றுதிறனாளியான குழுமணி பேரூர் அக்ரகாரத்தை சேர்ந்த ஜோதிவேல் மகள் கஸ்தூரி(31) திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், இவர் 15 வருடமாக புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வருகிறார். அந்த இடத்தை அரசு விசாரிக்காமல் ஏற்கனவே பட்டா உள்ள ஒருவருக்கு பட்டா வழங்கியதுடன், காலிசெய்ய வற்புறுத்துகின்றனர். இதை ரத்து செய்ய வேண்டும் என 4 முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

Tags : servants ,
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...