×

மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி கஞ்சா விற்றவருக்கு சிறை

திருச்சி, பிப். 9: திருச்சி ஜங்ஷன் எதிரே உள்ள கோயில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த கருணாமூர்த்தி (43) கஞ்சா விற்றது தெரியவந்தது. கருணாமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா, விற்பனை பணம் ரூ.390, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கருணாமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய...