×

திருவாரூரில் மின்வாரிய ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், பிப்.9: தனியார்மயத்தை கண்டித்து திருவாரூரில் மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும், புதிய மின் மசோதா சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக தொமுச மற்றும் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொமுச திட்ட ஆலோசகர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திட்ட செயலாளர் ஜான் பிரிட்டோ, சிஐடியூ தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பொறுப்பாளர்கள் ராஜா, பன்னீர்செல்வம், தனசேகரன், ரவிக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : protest ,Electricity Employees Union ,Thiruvarur ,
× RELATED அர்ஜெண்டினாவில்...