×

டி.கல்லுப்பட்டி அருகே சாலையில் கவிழ்ந்த காய்கறி லாரி

பேரையூர், பிப். 28: கர்நாடக மாநிலத்தில் இருந்து காய்கறி மூடைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தென்காசி மாவட்டம் சுரண்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது. லாரியை தர்மபுரியை சேர்ந்த சம்பத் மகன் குணா(27) என்பவர் ஓட்டி வந்தார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அடுத்த டி.குண்ணத்தூர் அருகே ராஜபாளையம் – திருமங்கலம் சாலையில் நேற்று காலை 7 மணியளவில் லாரி வந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது லாரியின் டீசல் டேங்க் உடைந்ததால் சாலையில் டீசல் கொட்டி பரவியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் குணா காயமின்றி தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் இருந்து லாரியை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Tags : D.Kallupatti. ,Peraiyur ,Karnataka ,Surand ,Tenkasi district ,Guna ,Sampath ,Dharmapuri ,D.Kallupatti ,Madurai district ,D.Kunnathur… ,
× RELATED கஞ்சா பறிமுதல்