×

பள்ளிகளில் 9, 11ம் வகுப்புகள் துவக்கம் தஞ்சையில் 7வது நாளாக சாலைமறியல் அரசு ஊழியர்கள் 47 பேர் கைது

தஞ்சை, பிப்.9: புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து ஏழாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தஞ்சாவூரில் கடந்த 2ம் தேதி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழாவது நாளாக நேற்று தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கோதண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த சாலைமறியல் போராட்டத்தில் மாவட்ட செயலர் ரெங்கசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Tags : servants ,schools ,
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...