×

பொதுமக்கள் அதிர்ச்சி சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி ரெத்தினகோட்டையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, பிப். 9: சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி ரெத்தினகோட்டையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அறந்தாங்கி அடுத்த ரெத்தினகோட்டை பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வலியுறுத்தி ரெத்தினகோட்டையில் அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் அப்பகுதி பொதுமக்கள், அரசு பள்ளி முன்னாள் மாணவர் கூட்டமைப்பினர் மறியலில் ஈடுபட முயன்றனர். இந்த தகவல் கிடைத்ததும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெரியசாமி, இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், ரெத்தினகோட்டை ஊராட்சி தலைவர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் முருகன் உள்ளிட்டோர் வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட வலியுறுத்தினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரெத்தினகோட்டை கிராமத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனே சீரமைக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.

Tags : protest ,roads ,Rethinakottai ,
× RELATED அர்ஜெண்டினாவில்...