×

இளம்பெண் தற்கொலை

கறம்பக்குடி, பிப். 9: கறம்பக்குடியில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கச்சேரி வீதியை சேர்ந்த தொழிலாளி பஷீர் அகமது. இவரது மனைவி சபீனா பேகம் (26). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் தான் ஆகிறது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி சமீனா பேகம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு கொண்டார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபீனா பேகம் இறந்தார். இதுகுறித்து சபீனா பேகத்தின் தந்தை அப்துல் ஹமீது கொடுத்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 8 மாதங்களே ஆனதால் புதுக்கோட்டை ஆர்டிஓவும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை