×

வாலிபர் கைது பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சீர்காழி, பிப். 9: சீர்காழி மின்சார வாரிய அலுவலகம் முன் மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். திட்ட மேலாளர் முத்துக்குமார், கோட்ட தலைவர் தேவேந்திரன், திட்ட இணை செயலாளர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மின்சார பணிகளை தனியாரிடம் கொடுக்கக்கூடாது. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கேங்மேன் 15 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோட்ட செயலாளர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

Tags : Power plant workers ,arrest ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...