×

க.பரமத்தி அருகே பரபரப்பு கரூர் வாங்கல் அருகே கத்தியை காட்டி பணம் பறிப்பு: 2 பேர் கைது


கரூர், பிப்.9: கரூர் வாங்கல் அருகே நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் மண்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம்(51). இவர், நேற்று முன்தினம் மாலை மண்மங்கலம் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர், சிதம்பரத்திடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1000த்தை பறித்துச் சென்றனர். இது குறித்து சிதம்பரம் வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார், வாங்கல் பகுதியை சேர்ந்த பகவதி(20), பூவரசன்(20) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Karur Vangal ,
× RELATED கரூர் வாங்கல் சாலை அரசு காலணியில் உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து!