×

49 ேபருக்கு கொரோனா

கோவை, பிப்.9: கோவை மாவட்டத்தில் புதியதாக 49 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 851-ஆக உயர்ந்தது.
மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 60 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 722-ஆக உள்ளது. தற்போது, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 455 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா காரணமாக நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 674-ஆக உள்ளது.

Tags : Corona ,persons ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...