×

வாலிபரை தாக்கிய பார் ஊழியர் கைது

கோவை, பிப்.9: கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இவர் போடிபாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கே பணியில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடியை சேர்ந்த பார் சப்ளையர் உதயகுமார் (29) என்பவருக்கும் மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உணவு சப்ளை செய்ய உதயகுமார் தாமதம் செய்துள்ளதாக தெரிகிறது. அவரை கண்டித்தபோது அவரும் எதிர்த்து திட்டியுள்ளார். இருவரும் தகராறு செய்து கொண்டிருந்தனர். கடும் கோபத்தில் இருந்த உதயகுமார் அங்கிருந்த இரும்பு ராடால் மணிகண்டனை தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் மதுக்கரை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர்.

Tags : Bar employee ,teenager ,
× RELATED ஐதராபாத் வாலிபர் ரஷ்யாவில் மரணம்