×

விளாத்திகுளத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்

விளாத்திகுளம்,பிப்.9: விளாத்திகுளத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்திற்கு அரசு  ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் தமிழரசன், கோரிக்கை குறித்து பேசினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 200க்கு மேற்பட்டோரை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் அறிவுறுத்தலின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவில் 40க்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட் டனர்.

Tags : Government Employees Union Stir ,Vilathikulam ,
× RELATED விளாத்திகுளம் அரசு கல்லூரியில்...