×

கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகை

கோவில்பட்டி, பிப்.9: இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 பஞ்சாயத்துக்களை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க கோரியும், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து எல்லைக்குள் இணைக்க வேண்டியும் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பாளர் கற்பூரராஜ், ஆடு வளர்ப்போர் மாநில தலைவர் கருப்பசாமி, நகர தலைவர் ராமசாமி, போராட்ட குழு உறுப்பினர்கள் ராஜாராம், குமார், முனியசாமி, பிச்சைதலைவன்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள், கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தர் நிஷாந்தினியிடம் மனு கொடுத்தனர்.

Tags : union ,Kottachiyar ,Kovilpatti ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...