செய்துங்கநல்லூர், பிப்.9: காயல்பட்டினத்தை சேர்ந்த சேகு முஹம்மது இஸ்மாயில் மகன் அப்துல் காதர் (22). இவர் சென்னையில் வசித்து வருகிறார். காயல்பட்டித்திற்கு வந்த அவர் மீண்டும் தனது நண்பர்களான ஆஜி, ஜாகிர், சிவா, கார்த்திக், சதீஷ் ஆகியோருடன் காரில் நெல்லை சென்ற போது செய்துங்கநல்லூர் அருகே உள்ள தூதுகுளி சாலை வளைவு பகுதியில் திடீரென கார் டயர் பஞ்சர் ஆகி கட்டுப்பாட்டை மீறி சாலை அருகில் உள்ள வயல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் வந்த 6பேருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்தகாயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் விசாரித்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு பைக்கில் வந்த இசக்கிமுத்து என்பவர் இதே இடத்தில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இப்பகுதியில் சாலை வளைவுகள் அதிகமாக இருப்பதால் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் வெளியூர் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே இந்த சாலையின் வளைவு பகுதியில் இரண்டு வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.