×

கலையரங்கம் கட்ட பூமிபூஜை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ராஜபாளையம், பிப்.9:  ராஜபாளையம் தொகுதியில் கலையரங்கம் கட்டுவதற்கான பூமிபூஜையை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். ராஜபாளையம் புத்தூர் ஊராட்சி வாழவந்தாள்புரம் மற்றும் ஜமீன்நல்லமங்கலம் ஊராட்சி பொட்டல்பட்டியில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை நடந்தது.  ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேசுகையில், ‘ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவன கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஊராட்சி தலைவர் ஆரோக்கியசாமி, திமுக கிளை செயலாளர்கள் ஆரோக்கியராஜ், மூர்த்தி, பாலமுருகன், பால்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து கலந்து கொண்டனர்.

Tags : Thangapandiyan MLA ,gallery ,
× RELATED பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன்...