×

9, பிளஸ் 1 மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை

விருதுநகர், பிப்.9:  விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 9 மற்றும் 11ம் வகுப்புகள் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொற்று குறைய துவங்கியதை தொடர்ந்து கடந்த ஜன.19ல் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் 301 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டன. 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் 320 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருவில்லிபுத்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 388 பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் 27,968 மாணவ, மாணவியரில் 23,104 மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு வந்தனர். பிளஸ் 1 படிக்கும் 23,628 மாணவ, மாணவியரில் 19,715 மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு வந்தனர்.  நேற்று பள்ளிக்கு வந்த 9 மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கும் வழக்கமாக தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதித்து, மாஸ்க், கிருமிநாசினி வழங்கி வகுப்பறைகளுக்குள் ஆசிரியர்கள் அனுமதித்தனர். இவர்களுக்கும் இரு தினங்கள் மனரீதியான கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...