×

கண்மாய்களில் மீன்பிடி ஏலத்தை முறையாக நடத்த வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு

விருதுநகர், பிப்.9: கண்மாய்களில் மீன்பிடி ஏலத்தை முறையாக நடத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ராஜபாளையம் முகவூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், கல்லூரியில் பட்டம் பெற்று தற்போது விவசாயம் செய்து வருகிறேன். ராஜபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 கண்மாய்கள்  கடந்த ஆண்டு ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டு, கொரோனாவால் ஏலம் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நடப்பு ஆண்டிற்கான மீன் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்பது தொடர்பாக ராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர், மேலாளரிடம் கேட்டால் உரிய பதில்கள் தெரிவிக்க மறுக்கின்றனர். மறைமுகமாக வேண்டிய நபர்களுக்கு ஏலம் விடுவதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.  வட்டார வளர்ச்சி அலுவலரை சந்திக்க சென்றால் அனுமதி மறுக்கப்படுகிறது. ராஜபாளையம் பிடிஓ மீது உரிய நடவடிக்கை எடுத்து, கண்மாய் ஏலங்களை முறைப்படி நடத்த கலெக்டர் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

Tags : Collector ,fish auction ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...