×

பெண் விஏஓ குடும்பத்தினர் மீது தாக்குதல் சிறுவன் உட்பட 2 பேர் கைது

விருதுநகர், பிப். 9: விருதுநகர் பாத்திமா நகர் பிச்சை தெருவைச் சேர்ந்தவர் அபிராமி (33). இவர், தென்காசி நடுவப்பட்டியில் விஏஓவாக உள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டுவாசலில் குடும்பத்துடன் அமர்ந்திருந்தார். அப்போது, ரோட்டில் சென்ற பாத்திமா நகரை சேர்ந்த 18 வயது சிறுவன் மற்றும் கட்டையாபுரத்தை சேர்ந்த ஸ்டீபன் (25) ஆகியோர் குடிபோதையில் அபிராமி குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இருவரையும், அபிராமியின் தந்தை சந்திரசேகர் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிறுவன் பிளேடால் சந்திரசேகரின் கையை கிழித்துள்ளான். ஸ்டீபன் கற்களை எடுத்து சந்திசேரகர், அபிராமி, அக்கா கார்த்தீஸ்வரி ஆகியோர் மீது எறிந்து காயப்படுத்தியுள்ளான். இது தொடர்பாக அபிராமி கொடுத்த புகாரின்பேரில், பஜார் போலீசார் வழக்குப்பதிந்து 18 வயது சிறுவன் மற்றும் ஸ்டீபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : VAO ,
× RELATED பட்டா வழங்க லஞ்சம் ஈச்சந்தா விஏஓவுக்கு நிபந்தனை ஜாமீன்