×

பாலத்திற்கு காத்திருக்கும் ஆபத்து

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.9:   ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் கட்டப்பட்டுள்ள பாலம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்களை ஆர்.எஸ்.மங்கலத்துடன் இணைத்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இப்பாலத்தின் துாண்களில் அத்தி, ஆலமரம், வேம்பு உள்ளிட்ட மர கன்றுகள் வளர்ந்து பெரிதாகி வருகின்றன. பாலத்தின் தூண்களில் வளர்ந்து வரும் மரக்கன்றுகளின் வேர்களால் பாலத்தின் சிமெண்ட் பூச்சுகளில் விரிசல் ஏற்பட்டு வருகின்றன.
இந்த மரக்கன்றுகளை தற்போதே அகற்றாவிட்டால், மிக பெரிய அளவில் வளர்ந்து விடும். இதனால் அதிக வாகன போக்குவரத்து உள்ள இந்த பாலத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் பாலத்தின் துண்களில் வளர்ந்து வரும் மரக்கன்றுகளை அகற்றி விட்டு சிறிய அளவில் உள்ள அதன் விரிசல்களை இப்பவே பராமரிப்பு செய்ய வேண்டும். இல்லை எனில் பாலம் முழு பலத்தையும் இழந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டு விடும். எனவே அவ்வாறு ஒரு நிலை ஏற்படுவதற்கு முன்னரே இதனை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : bridge ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...