×

திருமங்கலம் அருகே நூதன முறையில் போலீஸ்காரரிடம் ஏடிஎம் திருட்டு

திருமங்கலம், பிப். 9: திருமங்கலம் அருகே கூடக்கோவில் எஸ்பி தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிபவர் செல்லபாண்டி (40). உசிலம்பட்டி ரோட்டில் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் திருமங்கலம் ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். கார்டை சொருகிய பின் பணம் வரவில்லை. இவருக்கு பின்னால் நின்ற 40 வயது மதிக்கத்தக்க நபர் செல்லபாண்டியிடம் நான் எடுத்து பார்க்கிறேன் எனக்கூறி ஏடிஎம் கார்டை வாங்கி மிஷனில் சொருகி பின் நம்பரை கேட்டு அழுத்தியுள்ளார். அப்போதும் பணம் வராததால் சர்வர் பிராபளம் என கூறி ஏடிஎம் கார்டை கொடுத்து வெளியேறியுள்ளார். செல்லபாண்டி கார்டை வாங்கி கொண்டு மற்றொரு ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுக்க முயன்ற போது அது போலி ஏடிஎம் கார்டு என தெரியவரவே உடனடியாக சுதாரித்து வங்கியில் தகவல் கூறி பணத்தை மர்மநபர் எடுக்கும் முன்பு கார்டை லாக் செய்துள்ளார். தொடர்ந்து டவுன் போலீசாரிடம் நடந்ததை கூறி தேடிய போது பஸ்ஸ்டாண்டில் அந்த மர்மநபர் நிற்கவே அவரை பிடித்தனர்.  விசாரணையில் அவர் இதுபோல் ஏற்கனவே பலரை திருமங்கலம் ஏடிஎம் மையத்தில் நூதனமுறையில் ஏமாற்றி பணம் எடுத்துள்ளது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : ATM ,robbery ,police station ,Thirumangalam ,
× RELATED ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த...