×

மேலூர் அருகே பட்டப்பகலில் பரபரப்பு அரிவாளால் வெட்டி விவசாயி படுகொலை

மேலூர், பிப். 9:  மேலூர் அருகே பட்டப்பகலில் டூவீலரை மறித்து விவசாயி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. மேலூர் அருகே கொட்டகுடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). விவசாயி. இவர் நேற்று தனது அண்ணன் மகன் திவாகருடன் சேர்ந்து ஒரு திருமணத்திற்கு டூவீலரில் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். கொட்டகுடி விலக்கில் வந்தபோது பின்தொடர்ந்து வந்த கும்பல் இவர்களை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலே ராமச்சந்திரன் பலியானார். படுகாயத்துடன் திவாகர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்தில் எஸ்பி சுஜித்குமார், டிஎஸ்பி ரகுபதிராஜா விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் அதே ஊரை சேர்ந்த சிலருன் முன்விரோதம் இருந்ததால் இக்கொலை நடந்தது தெரிந்தது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Melur ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!