×

சவாரி வந்தவர் கொலைவெறி வாடகை கேட்ட ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு வத்தலக்குண்டுவில் பரபரப்பு

வத்தலக்குண்டு, பிப்.9: வத்தலக்குண்டுவில் வாடகை கேட்ட ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். வத்தலக்குண்டு பட்டுநூல்காரர் தெருவை சேர்ந்தவர் கணேசன்(39). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை வத்தலக்குண்டு பஸ்நிலையம் ஸ்டாண்டில் இருந்தார். அப்போது, தேனி மாவட்டம் போடியை சேர்ந்த தேங்காய் பறிக்கும் தொழிலாளி குமரவேல் என்பவர் பட்டிவீரன்பட்டி செல்ல வாடகைக்கு பேசினார்.  பின்னர் தன்னுடன் வந்த நண்பருடன் ஆட்டோவில் பட்டிவீரன்பட்டி சென்றார். பட்டிவீரன்பட்டி சென்றதும் குமரவேல் உடன் வந்த நண்பர் ஏடிஎம்மில் பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வரவே இல்லை. உடனே கணேசன் குமரவேலிடம் வாடகை குறித்து கேட்டார்.

அப்போது ‘வத்தலக்குண்டுக்கு ஆட்டோவை ஓட்டு, அங்கு வந்து வாடகை வாங்கி தருகிறேன்’ என்று குமரவேல் கூறினார். இதையடுத்து கணேசன் மீண்டும் ஆட்டோவை வத்தலக்குண்டு திருப்பினார்.வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் பகுதியில் வந்து கொ ண்டிருந்தபோது திடீரென குமரவேல் கையில் வை த்திருந்த அரிவாளால் கணேசனின் கழுத்தில் வெட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து குமரவேலை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கழுத்து மற்றும் கைகளில் காயமடைந்த கணேசனை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் பவுலோஸ், குமரவேலை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags : auto driver ,Vattalakundu ,rider ,
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...