ஒட்டன்சத்திரம், பிப். 9: ஒட்டன்சத்திரத்தில் திமுக இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அர.சக்கரபாணி எம்எல்ஏ தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ‘திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்தும், ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், தமிழ்ச்செல்வி ராஜா, ஒன்றியச் செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், தங்கராஜ், சுப்பிரமணி, கவிதாபார்த்திபன், சாமிநாதன், சீனிவாசன், சுப்பையா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர்கள் பாண்டியராஜன், ஆனந்தராஜ், சக்திவேல், பதுரூஸ்மான், ரவிசங்கர், உள்ளிட்ட ஒட்டன்சத்திரம் நத்தம் வேடசந்தூர் குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.