×

டாக்டர் வீட்டில் 5 லட்சம், 45 சவரன் துணிகர கொள்ளை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் விம்கோ நகர் அவென்யூ 2வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (39). இவரது மனைவி மஞ்சுளா (34). பல் டாக்டரான ஜெயபிரகாஷ் தண்டையார்பேட்டை  அருகே கிளினிக் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஜெயபிரகாஷ் தனது மனைவியுடன் வெளியில்சென்று இரவு வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 45 சவரன் நகை, 5 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை  மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும், கொள்ளையர்கள் போலீசில் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி விட்டு சென்றதும் தெரிந்தது. இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Tags : shaving venture robbery ,house ,doctor ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!