×

காதலை ஏற்காததால் ஆத்திரம்: மாணவி படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டவர் கைது

சென்னை: தனது காதலை ஏற்றுக்கொள்ளாததால் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய கல்லூரி மாணவியின் புகைப்படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் இந்துமதி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். இவரது தாய் வழி உறவினரான சேலம் அஷ்தம்பட்டியை சேர்ந்த பரசுராமன் (19), இன்ஸ்டாகிராம் மூலம் இந்துமதியிடம் பழகி வந்துள்ளார்.

இந்துமதி அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வது வழக்கம். அந்த புகைப்படங்களுக்கு பரசுராமன் லைக் செய்ததுடன், அழகாய் இருப்பதாக புகழ்ந்துள்ளார். ஒரு கட்டத்தில் பரசுராமன் இந்துமதியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவரது காதலை இந்துமதி நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரசுராமன், இன்ஸ்டாகிராமில் இந்துமதி ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை எடுத்து, அதை நிர்வாணமாக மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இந்துமதி, சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார்.

உடனே இதுகுறித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்துமதி புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், தனது காதலை ஏற்காததால் இந்துமதியை பழிவாங்கும் நோக்கில் அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டது தெரியவந்தது. அவரைபோக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Tags : student ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...