×

திண்டிவனம் அருகே பரபரப்பு பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் வெட்டி ₹22 ஆயிரம் துணிகர வழிப்பறி முகமூடி அணிந்து வந்த 3 பேருக்கு வலை

திண்டிவனம், பிப். 9:  திண்டிவனத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.22 ஆயிரத்தை முகமூடி ஆசாமிகள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- மரக்காணம் சாலை அருகே, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் நேற்று முன்தினம் இரவு புதூரை சேர்ந்த சுரேஷ் (24), எறையானூரை சேர்ந்த செந்தில்(38) ஆகியோர் இரவு பணியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பைக்கில் மங்கி குல்லா அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடும்படி கூறியுள்ளனர். அப்போது, சுரேஷ் பெட்ரோல் போட்டு கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் கத்தியை வைத்து அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் செந்தில் கையில் கத்தியால் வெட்டி அவரிடமிருந்த ரூ.2 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், பெட்ரோல் பங்க் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். திண்டிவனம் பெட்ரோல் பங்கில் கத்தி முனையில் ரூ.22 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : petrol punk employee ,Tindivanam ,
× RELATED திண்டிவனம் அருகே 13 வயது சிறுமியிடம்...