×

கோட்டை காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை திறப்பு

திருச்சி, பிப்.8: திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வரவேற்பாளர் அறை, ஆய்வாளர் அலுவலகம் மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டுபாட்டு அறை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்து, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். மேலும் அரசு பள்ளிகளில் மாணாக்கர்களில் நன்கு பயிலும் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் இலவசமாக வழங்கினார். விழாவில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பவண்குமார் ரெட்டி உள்பட போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இளைஞர் ஒளிர் கவினுலகு திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட 15 கல்வியில் சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நடைமுறை தொடர்ச்சியாக தகுதியானவர்களை கண்டறிந்து தக்க உதவிகள் அளிக்கப்படும் என விழாவில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Opening ,Fort Police Station ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா