×

காரைக்காலில் புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று

காரைக்கால், பிப்.8: காரைக்கால் மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 78,964 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. கடந்த 6ம் தேதி 464 பேருக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் காரைக்காலில் 2 பேருக்கும், நல்லம்பலில் ஒருவருக்கும், வரிச்சிக்குடியில் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள பரிசோதனைகளில் 3, 930 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களில் 3,811 பேர் குணமடைந்துள்ளதாக நலவழித்துறை (நோய் தடுப்பு ) துணை இயக்குனரக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

Tags : Corona ,Karaikal ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...