நாகை, பிப்.8: அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு சாலை விழிப்புணர்வு குறித்த பட்டிமன்றம் நாகை சர் ஐசக்நியூட்டன் கல்லூரியில் நடந்தது. சாலை பாதுகாப்பு மேம்பட பெரிதும் காரணம் புதிய சட்டத் திருத்தங்களே, பயன்படுத்துவோர் மனமாற்றமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. மேலாண் இயக்குநர் பொன்முடி நடுவராக செயல்பட்டார். புதிய சட்டத் திருத்தங்களே என்ற தலைப்பில் மாணவிகள் ஷாலினி, வைதேகி, மேகவர்ஷினி ஆகியோரும், பயன்படுத்துவோர் மனமாற்றமே என்ற தலைப்பில் பவித்ரா, செந்தமிழ்செல்வி, பாக்கியா ஆகியோரும் பேசினர். இதை தொடர்ந்து பேச்சுப்போட்டி, கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளுக்கும் மேலாண் இயக்குநர் பொன்முடி பரிசுகள் வழங்கினார். மண்டல பொது மேலாளர் மாரியப்பன், துணை மேலாளர்கள் ராஜா, சுவாமிநாதன், கோட்ட மேலாளர் செந்தில்குமார், முதல்வர் நிறைமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.