×

ராஞ்சியில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் நோயாளி உள்பட 7 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நேற்று(23-02-2026) இரவு ராஞ்சியில் இருந்து இரண்டு பணியாளர்கள் உட்பட ஏழு பேருடன் டெல்லிக்குச் சென்ற விமான ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் (பைலட் பயிற்சி அகாடமி அல்ல) நிறுவனத்தைச் சேர்ந்த பீச் கிராஃப்ட் சி90 (விடி-ஏஜேவி) இரவு 7.11 மணிக்கு 6,000 அடி உயரத்திற்கு ஏறிய சிறிது நேரத்திலேயே, விமானிகள் கொல்கத்தா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டைத் தொடர்பு கொண்டு அதாவது மோசமான வானிலையைத் தவிர்க்க பாதையை மாற்ற கேட்டனர். இருப்பினும், 39 ஆண்டுகள் பழமையான விமானம் விபத்துக்குள்ளானது.

வாரணாசியிலிருந்து தென்கிழக்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் கொல்கத்தாவுடனான தொடர்பையும் RADAR தொடர்பையும் விமானம் இழந்தது. மாவட்ட நிர்வாக தேடல் மற்றும் மீட்புக் குழு விபத்து நடைபெற்ற இடத்தில் உள்ளது. விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) குழு விசாரணைக்காக அனுப்பப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமான அறிக்கையின்படி, விமானத்தில் ஒரு நோயாளி (சஞ்சய் குமார்), மருத்துவர் (டாக்டர் விகாஷ் குமார் குப்தா), துணை மருத்துவர்கள் (சச்சின் குமார் மிஸ்ரா), இரண்டு உதவியாளர்கள் (அர்ச்சனா தேவி & துரு குமார்) மற்றும் இரண்டு விமானிகள் – கேப்டன்கள் விவேக் விகாஸ் பகத் மற்றும் சவ்ராஜ்தீப் சிங் ஆகியோர் இருந்தனர். இது இரவு 10 மணிக்கு டெல்லிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட ஏழு பேரும் உயிரிழந்தனர்.

Tags : Ranchi ,New Delhi ,Beech Craft ,Redbird Airways Private Limited ,
× RELATED தலைசிறந்த நிர்வாகியாக மக்கள் மனதில்...