×

உதயநிதி வருகையால் களைகட்டியது கரூர்

கரூர், பிப்.8: கரூர் மாவட்டத்தில் நேற்று (7ம் தேதி) மற்றும் இன்று (8ம்தேதி) இரண்டு நாட்கள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசி வருகிறார். முதல் நாள் அரவக்குறிச்சி, கருர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 2வது நாள் கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு பேசி வருவதால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுக கட்சிக் கொடி, வரவேற்பு பேனர்கள் போன்றவை பரவலாக வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று உதயநிதி ஸ்டாலின் வருகையால் பரபரப்புடனும், கலகலப்புடனும் களைகட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Karur ,arrival ,Udayanidhi ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்