×

பெரியபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயிலுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்வர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் சற்று குறைந்ததால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரியபாளையத்தில் அதிக அளவு  பக்தர்கள் கூட்டம் கோயிலுக்கு வந்தது. மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்ததால் பெரியபாளையம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு இல்லை. இதனால் பெரியபாளையம் பாலத்திலும், பஜார் பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறவழிச்சாலை அமைப்பதற்கு அளவீடு செய்யப்பட்டு 7 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் அதற்கான பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே புறவழிச்சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Periyapalayam ,
× RELATED பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி...