- யூனியன் அரசு
- ஸ்ரீலங்கான் ஊராட்சி
- ஜி. வாசன்
- சென்னை
- தமாக்
- இலங்கை கடற்படை
- பம்பன் துறைமுகம்
- ராமநாதபுரம் மாவட்டம்
- ராமேஸ்வரம்
- பாம்பன்
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதி மீனவ மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஒட்டுமொத்த மீனவர்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்று செயல்பட வேண்டும். தமிழக அரசும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
