×

குளத்தில் மூழ்கி சகோதரர்கள் பலி

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் காந்தி நகர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ராஜன். பெயின்டர். இவரது மகன்கள் வினோத்குமார் (14), விஷால் (12), இருவரும் ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9 மற்றும் 7 வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் நேற்று தனது நண்பருடன் புழுதிவாக்கம் அன்னை தெரசா நகரில் உள்ள மாநகராட்சி குளத்தில் குளித்தனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற விஷால், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்தான்.

இதை பார்த்த வினோத்குமார், தம்பியை காப்பாற்ற முயன்றான். அப்போது, அவனும் நீரில் மூழ்கினான். இதை பார்த்து உடன் சென்ற நண்பன் அலறி கூச்சலிட்டான். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்த மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Tags : Brothers ,pool ,
× RELATED அவமானங்கள்தான் தலைநிமிர வைத்துள்ளது!