×

புத்துணர்வு முகாமிற்கு சென்றது ஜெயமால்யதா

திருவில்லிபுத்தூர், பிப்.8: தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கு திருவில்லிபுத்தூர் கோயில் யானை ஜெயமால்யதா புறப்பட்டு சென்றது. தமிழகத்தில் உள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் துவங்குகிறது.

இதற்காக பல்வேறு கோயில்களின் யானைகள் மற்றும் சில தனியார் யானைகளும் தேக்கம்பட்டி செல்கின்றன. இதேபோல் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா நேற்று முன்தினம் அதிகாலை கோவிலில் இருந்து கிளம்பியது. இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Jayamalyada ,refresher camp ,
× RELATED ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானை...