×

தேர்தல் வந்து விட்டதால் ஐ.டி, ஈ.டி, சிபிஐயை பயன்படுத்தும் பா.ஜ: கனிமொழி எம்பி தாக்கு

 

தூத்துக்குடியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 76 பயனாளிகளுக்கு ரூ. 77.36 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி வழங்கினார். பின்னர் கனிமொழி எம்பி நிருபர்களிடம் கூறுகையில், ‘திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேலூர் மக்களை இன்னும் சந்திக்க வேண்டி உள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். ஓபிஎஸ் தொடர்பான அறிவிப்பு ஏதும் இருந்தால் அதை முதல்வர் வெளியிடுவார்.

கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை எப்பொழுதுமே சுமூகமாகத்தான் இருந்திருக்கிறது. ஏனென்றால் நீண்ட நாளாக இருக்கக்கூடிய உறவு. அதோடு கொள்கைக்காக உருவாகி இருக்கக்கூடிய கூட்டணி இந்த கூட்டணி. அதனால் நிச்சயமாக எந்த பிரச்னையும் இல்லாமல் நடக்கும். தேர்தல் வந்துவிட்டால் பாஜ அரசு வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். அதே வேலையை தமிழ்நாட்டிலும் தொடங்கியுள்ளனர்’ என்றார்.

 

Tags : I. D, E. D, Pa ,MB ,Thoothukudi ,Deputy Secretary General ,Kanimozhi MB ,Kanimozhi ,Dimuka ,
× RELATED அதிமுக என்ற கட்சியோடு தனது...