×

ஜாக்டோ ஜியோ இன்று முதல் நெல்லையில் தர்ணா

நெல்லை, பிப். 8: ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நெல்லையில் இன்று (8ம் தேதி) முதல்  தொடர்ந்து 3 நாட்கள்  மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில்  ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி தலைமை  வகித்தனர்.  மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் பெரியதுரை முன்னிலை வகித்தார்.  மாவட்ட குழு உறுப்பினர் வேல்ராஜன்  வரவேற்றார்.   

மூட்டா சங்க  பொதுச்செயலாளர் நாகராஜன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் உண்ணாவிரதம் இருக்கும் இன்று முதல் 3 நாட்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்   மாலைநேர ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.  கூட்டத்தில் ராஜ்குமார், ப்ளசிங் பாக்கியராஜ், வெங்கடேஷன், யூசுப், கோமதிநாயகம், இசக்கி முத்து, சிவஞானம், நசீர் முகமது, முத்துகுமார் பங்கேற்றனர். மாவட்ட குழு உறுப்பினர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Tags : Dharna ,
× RELATED இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்