×

இளம்பெண் தற்கொலை

நெல்லை, பிப். 8: பாளையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பாளை சமாதானபுரம் மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்த முருகேசன் மகள் கிரிட்டா (25). பொறியியல் பட்டதாரியான இவர், அதே பகுதியில் உள்ள ஒரு அரசு வங்கியில் தற்காலிகமாக வேலைபார்த்து வந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவருடன் அவருக்கு நிச்சயம் நடக்க முயற்சி நடந்துவந்த நிலையில் கிரிட்டா  நேற்று முன்தினம் இரவு வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சென்ற பாளை போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.  மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை