×

கிராம மக்களை விரட்டி கொட்டிய தேனீக்கள் குடியாத்தம் அருகே பரபரப்பு

குடியாத்தம், பிப்.8: குடியாத்தம் அருகே கிராம மக்களை தேனீக்கள் விரட்டி கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(42). இவர் அங்குள்ள தென்னந்தோப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 1 மணிக்கு வெந்நீர் காய வைக்க தென்னை மரத்தடியில் அடுப்பு பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் பறந்துவந்து கோவிந்தராஜ், அவரது மனைவி அமுதா, மகள்கள் பவானி, உமாதேவி, கோவிந்தராஜின் உறவினர் ராஜா மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களையும் விரட்டி கொட்டியது. இதையடுத்து தேனீக்கள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனீக்களிடமிருந்து தப்பிக்க அப்பகுதி மக்கள் அலறி ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Gudiyatham ,
× RELATED வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்கு...