×

தீ விபத்தில் சேதமடைந்த மஞ்சள் குடோனில் அமைச்சர் ஆய்வு

ராசிபுரம், பிப்.8: ராசிபுரம் அடுத்த  முத்துக்காளிபட்டியில், முன்னாள் அதிமுக எம்.பி சுந்தரத்திற்கு சொந்தமான  மஞ்சள் குடோன் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்முதல் செய்த 15 ஆயிரம்  மஞ்சள் மூட்டைகள் (மூட்டை 75 கிலோ எடை கொண்டது) வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 4ம்தேதி அதிகாலை மஞ்சள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ₹9 கோடி மதிப்பிலான மஞ்சள் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது. இந்நிலையில், நேற்று மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர், எம்பி சுந்தரத்தின் மஞ்சள் குடோனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தவர், சுந்தரத்துக்கு ஆறுதல் கூறினார். பின்னர் மஞ்சள் குடோன் தீவிபத்து சம்பவத்துக்கான காரணங்களை விரைந்து கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு  அமைச்சர் வலியுறுத்தினர். இந்த ஆய்வின் போது, கலெக்டர் மெகராஜ், எஸ்பி சக்திகணேசன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Minister ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...