×

பெண்ணங்கூர் கிராமத்தில் எருதாட்ட விழாவில் 200 காளைகள் பங்கேற்பு

தேன்கனிக்கோட்டை, பிப்.8: தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணங்கூர் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடந்தது. விழாவில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. விழாவில், அலங்கரிக்கப்பட்ட காளைகளின் கொம்புகளில் தட்டிகளை கட்டி, இலக்கை நோக்கி ஓடவிட்டனர். சீறிப்பாய்ந்த காளைகளின் கொம்புகளில் கட்டியிருந்த தட்டிகளை மாடுபிடி வீரர்கள் தட்டி பறித்தனர். வீரர்களிடம் சிக்காத காளைகள் இலக்கை அடைந்தன. காளைகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் லேசான காயம் அடைந்தனர். எருதாட்டத்தை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : bulls ,bullfighting festival ,village ,
× RELATED மஞ்சு விரட்டில் மாடு முட்டி முதியவர் சாவு