×

பாலக்காடு அருகே 6 வயது மகனை கழுத்தறுத்து கொன்ற தாய் கைது

பாலக்காடு,பிப்.8:  பாலக்காடு அருகே தூங்கி கொண்டிருந்த 6 வயது மகனை எழுப்பி குளியலறைக்கு அழைத்து சென்று கழுத்தறுத்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். பாலக்காடு புதுப்பள்ளித் தெருவை சேர்ந்தவர் சுலைமான் (35). டாக்ஸி டிரைவர். இவரின் மனைவி ஷஹீதா (32). பள்ளிவாசலில் அரபி ஆசிரியை. தம்பதிக்கு 11 வயது, 8 வயது மற்றும் 6 வயதில் 3 மகன்கள் இருந்தனர். நேற்று முன்தினம் சுலைமான் 2 மகன்களுடன் ஒரு படுக்கை அறையில்  தூங்கினார். ஷஹீதா 6 வயது மகனுடன் வேறு ஒரு அறையில் தூங்கினார். நேற்று அதிகாலை 3 மணயளவில் ஷஹீதா தன்னுடன் தூங்கி கொண்டிருந்த சிறுவனை எழுப்பி குளியலறைக்கு அழைத்து சென்று கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தூங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பி இளைய மகனை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சுலைமான் அளித்த புகாரின் பேரில், பாலக்காடு எஸ்பி. விஸ்நாத் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஷஹீதாவை பாலக்காடு டவுண் போலீசார் கைது செய்தனர்.

Tags : Palakkad ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது