×

அம்மா உணவக சாம்பார் சாதத்தில் புழு

தூத்துக்குடி, பிப்.5: தூத்துக்குடி அம்மா உணவக சாம்பார் சாதத்தில் புழு கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. கட்டிட தொழிலாளியான இவர் தனது மனைவியை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகேயுள்ள அம்மா உணவகத்திற்கு சென்று சாம்பார் சாதம் வாங்கினார். பின்னர் அதை உண்ண தயாரான போது அந்த சாதத்தில் புழு ஒன்று வெந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அந்த உணவகத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவல்கள் படத்துடன் நேற்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வலம் வந்தது. மேலும் அம்மா உணவகத்தை பயன்படுத்தும் ஏழை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...