×

கலெக்டர் வழங்கினார் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய கோரி 3வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்

பெரம்பலூர்,பிப்.5: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல தீர்மானங்களை வலியுறுத்தி நேற்று 3 வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை (சிபிஎஸ்) ரத்து செய்திட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள், சமூக வன பாதுகாவலர்கள், மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரத்துறையில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என கொத்தடிமை கூலிமுறை பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும். அரசுத்துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் பாலக்கரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் 3வது நாளான நேற்று பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்ற மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மா வட்ட துணை தலைவர் மரியதாஸ் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் குமரிஆனந்தன், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், தமிழ்நாடு சாலை ப ணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் என சாலை மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்பட 47 பேர் பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Tags : Collector Employees Union Strike ,cancellation ,
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...